இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பில் பஷில் ரணிலுடன் பேச்சு - திஸ்ஸ அத்தனாயக்க

Published By: Digital Desk 3

07 Jun, 2022 | 09:03 AM
image

(எம்.மனோசித்ரா)

உத்தேச அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பில் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

எக்காரணம் கொண்டும் இந்த விடயத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஐக்கிய மக்கள் சக்தியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 21 ஆவது திருத்தமே வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு எதிர்வரும் 15 ஆம் திகதி சபாநாயகருக்கு வழங்கப்படவுள்ளது. 

இந்த திருத்தத்தில் 19 இற்கும் அப்பால் 19 பிளஸ் என்ற வகையில் பல திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும்.

ஆனால் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 21 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அதன் உள்ளடக்கங்கள் என்ன என்பது எமக்கு முழுமையாகத் தெரியாது. 

இதனை நிறைவேற்றுவதாயின் 19 இல் உள்ள அடிப்படை ஜனநாயக உறுப்புரைகளையும் உள்வாங்க வேண்டும். அவ்வாறில்லை எனில் அரசாங்கத்தின் அரசியலமைப்பு திருத்தத்தினை நிறைவேற்றுவதற்கு இன்னும் ஓரிரு மாதங்கள் செல்லும்.

ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள திருத்தத்தினை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டால் இம்மாதம் 3 ஆம் வாரத்திற்குள் நிறைவேற்றிக் கொள்ள முடியும். எனவே எம்மால் முன்வைக்கப்பட்ட திருத்தத்தினை விரைவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.

இவ்வாறான நிலையில் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

எக்காரணம் கொண்டும் இந்த விடயத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06