(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)
பாராளுமன்றின் வருடாந்த அறிக்கைகள், செயலாற்று அறிக்கைகள் உள்ளிட்ட ஏனைய அறிக்கைகளை இலத்திரனியல் பிரதிகள் மூலம் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கும், சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பதற்கும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்ற கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை (07) கூடிய போது பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளை அறிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்.
வருடாந்த அறிக்கைகள் , செயலாற்று அறிக்கைகள் உள்ளிட்ட ஏனைய அறிக்கைகளை இலத்திரனியல் பிரதிகள் மூலம் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அறிக்கைளை அச்சிடும் செயற்பாடுகளுக்கு தேவையான மூலப்பொருட்கள், குறுந்தட்டுக்கள்'ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமம் அத்துடன் அவற்றுக்கான அதிக பணத்தை செலவிட வேண்டியுள்ளமை, குறுந்தட்டுக்களை மீள்சுழற்சி செய்யும் போது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பாராளுமன்ற விவகாரம் தொடர்பான குழு கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அதற்கமைய பாராளுமன்ற அறிக்கைகளை இலத்திரனியல் முறைமைக்கு உள்ளடக்க அதிகாரி ஒருவரை நியமித்து,குறிப்பிட்ட தினத்திற்குள் குறித்த அறிக்கைகளின் பிரதிகளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பிவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 12(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் அரசியலமைப்பின் 21ஆம் திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஐந்து மனுக்களின் பிரதிகளும் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நான்கு மனுக்களின் பிரதிகளும் தம க்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM