(எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டின் அரசியல் நெருக்கடிக்கு பிரதான காரணமாக அமைந்திருக்கும் 20ஆம் திருத்தத்தை இல்லாமலாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் பிரதான நடவடிக்கையாக இருக்கவேண்டும் என முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோரிக்கிடையில் சனிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் பிரதான கடமையாக அரசியலமைப்பின் 20ஆம் திருத்தத்தை இல்லாமலாக்க முன்னுரிமை வழங்கவேண்டும்.
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார, அரசியல் பிரச்சினைகளுக்கு 20ஆம் திருத்தமே காரணமாகும். அதனால் 20ஆம் திருத்தத்தை இல்லாமலாக்க விரைவாக நடவடிக்கை எடு்க்கவேண்டும்.
அதேபோன்று நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டிருக்கும் உணவு பிரச்சினை தொடர்பாக அனைத்து சமூகங்களும் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
உணவுப் பிரச்சினைக்கு முகம்கொடுக்க முடியுமான வகையில் தற்போதிருந்தே விவசாய நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான வசதிகளை அரசாங்கம் செய்துகொடுக்க வேண்டும்.
அத்துடன் வீட்டு பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உத்தேச அரசியலமைப்பின் 21ஆம் திருத்தம் தொடர்பாகவும் பாராளுமன்ற செயற்குழுக்களை பிரயோனமுள்ளதாக செயற்படுத்துவதன் தேவை தொடர்பாக தெரிவித்துள்ளதுடன், அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் அதன் ஊடாக நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடியை போக்குவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்துடன் புதிய பாராளுமன்ற குழுக்களை அமைக்க இணைந்து செற்படுவதற்கு முன்வருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை இதன்போது கருஜயசூரிய ஏற்றுக்கொண்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM