(எம்.வை.எம்.சியாம்)
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துகளில் 14 வயது சிறுவன் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பனாமுற
பனாமுற பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பனாமுற-மித்தெனிய பிரதான வீதியின் சிறுவன் ஒருவன் மீது லொறி ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது பலத்த காயமடைந்த சிறுவன் எம்பிலிபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவன் 14 வயதுடைய மித்தெனிய, பனாமுற பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். குறித்த லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பனாமுற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடவத்தை
கடவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கொழும்பு-கண்டி பிரதான வீதியின் கிரிவல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 27 வயதுடைய கலெபிந்துன்னுவெ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் கடவத்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடுபொத
கடுபொத பொலிஸ் பிரிவில் கடுபொத-ரம்பெவ வீதியின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் லொறி ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் கடுபொத வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 24 வயதுடைய மெடிய கான பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் கடுபொத பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM