வாகன விபத்தில் 14 வயது சிறுவன் உட்பட மூவர் பலி

Published By: Vishnu

06 Jun, 2022 | 02:38 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துகளில் 14 வயது சிறுவன் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பனாமுற

பனாமுற பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பனாமுற-மித்தெனிய பிரதான வீதியின் சிறுவன் ஒருவன் மீது லொறி ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது பலத்த காயமடைந்த சிறுவன் எம்பிலிபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் 14 வயதுடைய மித்தெனிய, பனாமுற  பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். குறித்த லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.  சம்பவம் தொடர்பில் பனாமுற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடவத்தை

கடவத்தை  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கொழும்பு-கண்டி பிரதான வீதியின் கிரிவல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 27 வயதுடைய கலெபிந்துன்னுவெ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் கடவத்த பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடுபொத

கடுபொத பொலிஸ் பிரிவில் கடுபொத-ரம்பெவ வீதியின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் லொறி ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் கடுபொத வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 24 வயதுடைய மெடிய கான பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் கடுபொத பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38