இலங்கைக்கான அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது கிரிக்கெட் தொடருக்கான டிக்கட்டுகள் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தையும், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா குறிப்பிடுகையில்,
டிக்கட்டுகள் விற்பனை மூலம் கிடைக்கும் முழுப் பணத்தையும் பொதுமக்களுக்கு வழங்கவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை எதிர்பார்த்துள்ளது.
அத்தோடு, இலங்கைக்கான அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிந்தவுடன் பாகிஸ்தான் விரைவில் நாட்டிற்கு வரும், அதன் பின்னர் கொழும்பில் ஆசிய கோப்பை இடம்பெறவுள்ளது.
எனவே இந்த போட்டிகளை ஆதரிக்க வேண்டுமென அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என மொஹான் டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM