(எம்.வை.எம்.சியாம்)
பதுளை ஆதார வைத்தியசாலையின் சேவையில் இருந்த வைத்தியரை தாக்கி வைத்திய உபகரணங்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் நேற்று முன்தினம் 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை வைத்தியசாலைக்கு உடல் நலக்குறைவினால் அனுமதிக்கபட்ட ஒருவர் உயிரிழந்ததன் காரணமாக சேவையில் இருந்த வைத்தியர் அவரின் உறவினர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
இதன் போது பலத்த காயமடைந்த வைத்தியர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பதுளை வைத்தியசாலையில் நிர்வாகம் இணைந்து வைத்தியசாலையின் முன்றலில் குறித்த சம்பவத்தை கண்டிக்கும் விதத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM