ஒக்டோபரில் உணவுத் தட்டுப்பாடு : சார்க் பாராளுமன்றை நாடுவாரா பிரதமர் ?

Published By: Digital Desk 5

05 Jun, 2022 | 01:06 PM
image

ரொபட் அன்டனி 

உணவு பஞ்சம் தொடர்பாக பிரதமர்   கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.  அவர் எதிர்க்கட்சியில் இருந்த போது உணவு பஞ்சத்தை எதிர்கொள்ள சார்க்  பாராளுமன்றத்தை நாடி உதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.  தற்போது அவர் பிரதமராக இருக்கிறார்.  எனவே அவர் உடனடியாக சார்க் பாராளுமன்றத்‍துடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கைக்கான உணவு நெருக்கடியை தீர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

நாட்டில் தடுக்க முடியாத அளவுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர்  பாரிய அரிசி தட்டுப்பாடு ஏற்படும். உணவு வீண்விரயத்தை இயலுமான அளவு தவிர்த்துக்கொள்ள வேண்டும். விவசாய கொள்கையை அரசாங்கம் விரைவாக மாற்றியமைக்க வேண்டும்.

சிறுபோக பயிர்ச்செய்கை தோல்வியடைந்தால் முழு நாடும் பாரதூரமான சவால்களை எதிர்க்கொள்ள நேரிடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீட சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே  அண்மையில் தெரிவித்திருந்தார்.   இந்த விடயம் குறித்து சகல தரப்பினரும் மிகவும் விழிப்புடனும்  தெளிவுடனும் இருக்கவேண்டியது முக்கியமாகும். 

தற்போது நாட்டில் நிலவி கொண்டிருக்கின்ற அரசியல் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடி, டொலர் பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு,   விலை உயர்வு,  எரிபொருளுக்கான வரிசைகள், எரிவாயு தட்டுப்பாடு,   வரிசை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, போக்குவரத்து கட்டணங்கள் உயர்வு   என மக்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி கொண்டிருக்கின்றனர்.  இதன்  காரணமாக மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.  

இந்தநிலையில் இவ்வாறான நெருக்கடிக்கு மத்தியிலேயே   மிக அதிக அளவாக பேசப்படுகின்ற ஒரு விடயமாக எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் நாட்டில் ஏற்படப் போவதாக கூறப்படுகின்ற உணவு நெருக்கடி அல்லது உணவு பஞ்சம் என்பது மாறியிருக்கின்றது. 

உணவு நெருக்கடி ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்பது தொடர்பாக தற்போது பலரும் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.  மிக முக்கியமாக பல்வேறு எதிர்வுகூறல்கள் இதன்மூலம் வெளிக்கொண்டு வரப்பட்டு கொண்டிருக்கின்றன. 

முக்கியமாக உணவு நெருக்கடி ஏற்படும் என்றும் மக்கள் உணவின்றி இறக்கும்   நிலைமை ஏற்படும் என்றும் இதனால் தற்போதே  இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு தயாராக வேண்டும் என்றதுமான   அதிர்ச்சிகரமான அபாயகரமான  தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.  

பொதுவாக உலகில் உணவுப் பஞ்சம் என்பது காலநிலை மாற்றம் அல்லது மழையின்மை வரட்சி போன்ற விடயங்களால் ஏற்படுவதுண்டு. 

ஆனால் இம்முறை உணவு நெருக்கடி அல்லது உணவு பஞ்சம் என்பது பல்வேறு உப காரணங்களினால் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

அதன்ப்யே இலங்கையில் ஒக்டோபர் மாதமளவில் உணவு நெருக்கடி ஏற்படும் என்று கூறப்படுகின்றது.   இக்காலப்பகுதியில் உலக நாடுகளிலும் உணவு நெருக்கடி ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.   

இக்காலப்பகுதிகளில் உலக நாடுகளிலும் ஒரு உணவு நெருக்கடி அல்லது உணவு பஞ்சம் அல்லது   ஏற்படும் என்றும் அதனால் இலங்கையில் ஏற்படப்போகும் உணவு நெருக்கடிக்கு   இந்த சர்வதேச நிலைமையும் ஒரு மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்  என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படும்போது  உணவை இறக்குமதி செய்வதன் ஊடாக அதனை நிவர்த்தி செய்யலாம்.  ஆனால்  இக்காலப்பகுதியில் சர்வதேச மட்டத்திலும் ஒரு உணவு நெருக்கடி ஏற்படும் என்று எதிர்வு கூறப்படுவதால் இலங்கைக்கு அது மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது.   

காரணம்  இறக்குமதி செய்வதற்கு சர்வதேச மட்டத்தில் நெருக்கடி ஏற்படலாம்.  அதேபோன்று  இலங்கையிடம் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய  டொலர் இல்லாமல் போகலாம்.

எனவேதான் பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் பேராசிரியர் குறிப்பிடுகின்ற விடயங்கள் மிக முக்கியம் மிக்கதாகவே இருக்கின்றன. 

எனவே இந்த நிலைமையை தடுப்பதற்கு இதனை வெற்றிகரமாக எதிர் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போதே மேற்கொள்ளப்படவேண்டும்.  

இலங்கையில் இந்த உணவு நெருக்கடி ஏற்படுவதற்கான பிரதான இரண்டு அல்லது மூன்று காரணங்கள் காணப்படுகின்றன. 

ஒன்று இலங்கையில் தற்போது டொலர்  பற்றாக்குறை நிலவுகின்றது.  இதனால் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதில் அடுத்தடுத்த மாதங்களில் நெருக்கடி நிலைமை ஏற்படலாம். 

இரண்டாவதாக உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு ஒரு மிகப்பெரிய  காரணியாக அமைகின்றது.   டொலரின் பெறுமதி அதிகரித்து செல்வதால் இறக்குமதி பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. 

இதன் காரணமாக ஒரு நெருக்கடி நிலை ஏற்படலாம்.     உணவு உற்பத்திக்கு இலங்கையில் எரிபொருள் மிக முக்கியமானதாக இருக்கின்றது. 

ஆனால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றது.  எரி‍பொருட்களின் விலைகளும்   அதிகரித்து செல்கின்றன.   இது உணவு உற்பத்தியை பாதிக்கலாம்.   

‍மேலும்  கடந்த வருடம் கொண்டுவரப்பட்ட ரசாயன உர பாவனை காரணமாக கடந்த பெரும் போகத்தில் அரிசி உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டு இருந்தது. அதேபோன்று சிறுபோக விளைச்சலிலும்  வீழ்ச்சி ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.   

அதனால் இலங்கைக்கு  தேவையான முழுமையான அரிசி உற்பத்தியை இந்த இரண்டு பக்கத்திலும் பெற முடியாத நிலை வரலாம்.   

அதன் காரணமாக  மக்களின் உணவுத் தேவையில் நெருக்கடி ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.  அரிசியை இறக்குமதி செய்வதன் மூலம் நிவர்த்தி செய்யலாம் என்று பார்த்தால் அதற்கான டொலர் நெருக்கடி காணப்படுகின்றது.   

உணவு பஞ்சம் அல்லது  நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் மாதம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் தொன் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

ஆனால் அதற்கான டொலர் இருக்கின்றதா என்பதை இங்கு கேள்வியாக உள்ளது.  அதுமட்டுமன்றி அடுத்தடுத்து வரும் காலங்களில்  விவசாய செய்கையை மேற்கொள்வதற்கு யூரியா உரம் தேவைப்படுகிறது.

அதற்கு டொலர் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகும்.  காரணம் சுமாராகவே வருடம் ஒன்றுக்கு 600 மில்லியன் டொலர்களுக்கு   உர இறக்குமதி செய்யப்படுகின்றது. 

ஆனால் தற்போது  ஒரு எரிவாயு கப்பலை விடுவித்துக் கொள்வதற்கு 10 மில்லியன் மற்ஞறும்  20 மில்லியன் டொலர்களை  தேடிக் கொள்வதே மிக சிக்கலானதாக காணப்படுகிறது. 

எனவே எப்படி உணவு நெருக்கடி தீர்க்கப்படும் என்பது தீர்க்கமானதாகவுள்ளது. இந்தநிலையில்  பொருளாதாரத் துறை சார்ந்தவர்கள் விவசாயத் துறை சார்ந்தவர்கள் கூறுகின்ற விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.  முக்கியமாக எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு இதனை தடுக்க முடியும் என்பதே  முக்கியமாகும்.  

முக்கியமாக ஒக்டோபர் மாதமளவில் எப்படியாவது அரிசி மற்றும் கோதுமை இறக்குமதி தேவையானளவு முன்னெடுக்க வேண்டும்.   

அதற்கான நடவடிக்கைகளை தற்போதே திட்டமிடுவது முக்கியமாகும். அதேபோன்று இக்காலப்பகுதியில் எந்தவித சிக்கலுமின்றி எரிபொருளை இறக்குமதி செய்வதும் அவசியமாகும்.   

அதேபோன்று  கோதுமை மற்றும் அரிசியை இறக்குமதி செய்வதன் ஊடாக இந்த பிரச்சினையை தீர்க்கமுடியும்.  அத்துடன் இலங்கையில் விவசாய செயற்பாடுகளை முன்னெடுக்க எரிபொருள் உரத்தை பெற்றுக்‍கொடுப்பது முக்கியமாகும்.

இவற்றை திட்டமிட்டு சரியான முறையில் செய்வதனூடாக இந்த பிரச்சினைக்கு ஓரளவு முகம் கொடுக்க முடியும்.  மேலும் சகல தரப்பினரும் நாட்டில் வீட்டு தோட்டங்களை  செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். 

நகர் பகுதியில் இருப்பவர்களுக்கு இது மிக கடினமானதாக இருக்கம். ஆனால் நகரங்களுக்கு வெளியே இருக்கின்ற மக்கள் அனைவரும் ஏதாவது ஒரு வழியில்   விவசாய உற்பத்தியை  வீட்டு  தோட்ட உற்பத்தியை மேற்கொள்வதற்கான சாத்தியம் இருக்கின்றது.  அதனை செய்வது  பிரச்சினையை எதிர் கொள்வதற்கான ஒரு சிறந்த காரணியாக அமையும். 

முக்கியமாக தற்போது அரசாங்கம் டொர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன்  பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கின்றது. 

கடந்த ஏப்ரல் மாதம் இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன.  எனவே ஆறு மாத காலத்தில் இலங்கைக்கான நிதியுதவிகளை  கட்டங்கட்டமாக வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.   

அந்த உதவி கிடைக்கும் பட்சத்தில் கோதுமை மற்றும் அரிசியை இறக்குமதி செய்துகொள்ளலாம்.     மற்றும் உரம் ‍எரிபொருள்  போன்றவற்றை இறக்குமதி செய்து கொள்ளவும்   முடியும் என்று எதிர்வு கூறப்படுகின்றது.   

எனினும் ஒரு மாதத்துக்கு இலங்கைக்கு எரிபொருளுக்காக 600 மில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றன.  அதேபோன்று ஏனைய பொருட்களுக்காகவும் பாரியதொரு டொலர் தொகை தேவைப்படுகின்றது. 

எனவே இவற்றுக்கான தீர்வை   சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியுமா?   என்பதும் ஆராயப்படவேண்டும்.   

உணவு பஞ்சம் தொடர்பாக பிரதமர்   கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.  அவர் எதிர்க்கட்சியில் இருந்த போது உணவு பஞ்சத்தை எதிர்கொள்ள சார்க்  பாராளுமன்றத்தை நாடி உதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார். 

தற்போது அவர் பிரதமராக இருக்கிறார்.  எனவே அவர் உடனடியாக சார்க் பாராளுமன்றத்‍துடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கைக்கான உணவு நெருக்கடியை தீர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

அத்துடன் நாடுகளுடன்  பேச்சுவார்த்தை நடத்தி  இலங்கைக்கான உணவு உதவியை பெற்றுக்கொள்ள முடியும்.  உணவு நெருக்கடியை இதன் மூலமாக எதிர்கொள்ள முடியும்.   

எனவே பிரதமர் இதற்கான  பேச்சுவார்த்தைகளை  நடத்தி இலங்கைக்கான உதவிகளை பெற்றுக் கொண்டு   உணவு தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கான நடவடிக்கைகளை  எடுக்க  வேண்டும். 

அவர் அந்த செயற்பாடுகளை தற்போது மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் இந்த விடயத்தில் சகல தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

அரசியல் கட்சிகள் அரசியல் தலைவர்கள் சம்பந்தப்பட்ட துறை சார் நிபுணர்கள் இந்த விடயத்தில் கூட்டாக இணைந்து இதனை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது தொடர்பாக சிந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

எதிர்வு கூறல்கள் முன்வைக்கப்படுகின்றன.  பிரச்சினைகள் உணரப்படுகின்றன.  ஆனால் அதனுடன் அவற்றுக்கான தீர்வுகளும் ஆராயப்படவேண்டும்  என்பதுடன் திட்டமிடல்களும்  இருந்தால் மட்டுமே இந்த பிரச்சனையில் இருந்து வெளியே வர முடியும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04