ஐநா அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்தார் பிரதமர் - நாட்டின் உணவு நிலை குறித்து பேச்சுவார்த்தை

Published By: Rajeeban

03 Jun, 2022 | 01:31 PM
image

விவசாயிகள் எதிர்கொண்டுள்ள தட்டுப்பாடுகளிற்கு தீர்வை காண்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுத்தால் ஐந்து ஆறு மாதங்களில் தற்போதைய விவசாய தட்டுப்பாடுகளிற்கு தீர்வை காணமுடியும் என பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உணவு விவசாய ஸ்தாபனத்தின் இலங்கை;கான பிரதிநிதி விம்லேந்திர சரான்  ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் பிரதி வதிவிடப்பிரதிநிதி மலின் ஹேர்விக் ஆகியோருடன் நாட்டின் தற்போதைய உணவு நிலை குறித்து  இன்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

உணவுதட்டுப்பாடு ஆபத்து  காரணமாக விவசாய திணைக்கள அதிகாரிகள் உணவு பாதுகாப்பு திட்டத்தை உருவாக்கி வருகின்றனர் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை அடுத்த மாதம் வெளியிடவுள்ளதாகவும் பிரதமர்தெரிவித்துள்ளார்.

யுஎன்டிபி அதிகாரி இதற்கு தனதுஆதரவை வெளியிட்டுள்ளார்.

விவசாய துறை தற்போது எதிர்கொள்ளும் பெரும் பிரச்சினை உர எரிபொருள் தட்டுப்பாடு என தெரிவித்துள்ள பிரதமர் தற்போதைய உணவுதட்டுப்பாட்டிற்கு தீர்வை காண்பதற்காக தான் உருவாக்கியுள்ள நகர விவசாய முயற்சி குறித்தும் எடுத்துரைத்துள்ளார்.

உரத்தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கு விவசாயிகளிற்கு உதவுவதற்காக விவசாய உதவி திட்டமொன்றை உருவாக்கி வருவதாக யுஎன்டிபி தெரிவித்துள்ளது.

இலங்கையின் நகர விவசாய திட்டத்திற்கு உதவுவதற்கு இலங்கைக்கு உதவி வழங்கும் சமூகத்தை சேர்ந்தவர்கள் முன்வந்துள்ளனர் என உணவு விவசாய ஸ்தாபனத்தின் பிரதி தெரிவித்துள்ளார்.

இதனை வெற்றிகரமாக நிறைவேற்றினால் மேலும் நிதி உதவி கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்காக உணவு நெருக்கடிக்கு பதிலளிக்கும் திட்டமொன்றை உருவாக்கிவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகள் எதிர்கொண்டுள்ள தட்டுப்பாடுகளிற்கு தீர்வை காண்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுத்தால் ஐந்து ஆறு மாதங்களில் தற்போதைய விவசாய தட்டுப்பாடுகளிற்கு தீர்வை காணமுடியும் என பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04