(ஏ.என்.ஐ)
வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இரு மத்திய ஐரோப்பிய நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலேயே இந்த விஜயம் அமைந்துள்ளது.
வியாழக்கிழமை (02) ஆரம்பிக்கப்பட்ட இந்த விஜயத்தில ஜெய்சங்கர் ஸ்லோவாக்கியாவின் பிரதமர் எட்வார்ட் ஹெகரை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
மேலும் ஸ்லோவாக்கியாவின் வெளியுறவு மற்றும் ஐரோப்பிய விவகார அமைச்சர் இவான் கோர்காக்குடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் முன்னெடுக்க உள்ளார்.
மேலும் அவர் குலோப்செக் 2022 மாநாட்டிலும் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். , 'நட்பை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நட்பு நாடுகள்' என்ற தலைப்பிலேயே ஜெய்சங்கர் உரை நிகழ்த்த உள்ளார்.
அத்துடன் ஆஸ்திரியாவின் ஐரோப்பிய மற்றும் சர்வதேச விவகார அமைச்சர் அலெக்சாண்டர் ஷால்லென்பெர்க்கை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
ஜூன் 4 முதல் 6 வரை செக் குடியரசுக்கான தனது விஜயத்தின் போது, ஜெய்சங்கர் செக் குடியரசின் வெளியுறவு அமைச்சர் ஜான் லிபாவ்ஸ்கியுடன் கலந்துரையாடுகிறார்.
மறுப்புறம் ஜூலை 1, 2022 முதல் செக் குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பையும் ஏற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM