இருளால் கொண்டுவரப்படும் தீமைகளாலும் இழப்புகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு ஒளியைத் தேடிச்சென்ற மனிதன் தீமைகளுக்குப் பதிலாக நன்மையைும் அறியாமைக்கெதிராக அறிவையும் இழப்புகளுக்கு எதிராக நம்பிக்கையையும் வெற்றிகொள்ளும் உலக உண்மையே தீப ஒளியில் பிரகாசிக்கின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டு மோதல்களும் அதனால் சமூகத்தின் மீது படர்ந்திருந்த இருளும் நீங்கிய இன்றைய சூழ்நிலையானது எமது சமூகத்தை இருளிலிருந்து ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி இட்டுச்செல்லக் கிடைத்த பெறுமதியான வாய்ப்பாகுமென கருதுகிறேன்.
ஒரு நாட்டினதும் சமூகத்தினதும் சுபீட்சமானது அந்த நாட்டில் நிலவுகின்ற சமாதானம் மற்றும் சகவாழ்வினாலேயே உறுதிப்படுத்தப்படுகின்றது. எனவே அனைவரது மனங்களிலும் சகவாழ்வும் நல்லிணக்கமும் மிளிர வேண்டும் என்பதே இன்றைய தீபாவளி தினத்தில் எனது பிராத்தனையாகும்.
ஐக்கியமென்பது இன்றைய உலகின் இருப்புகளுக்குத் தேவையான அடிப்படையான நிபந்தனையாகவுள்ள பின்னணியில், நாம் அனைவரும் ஆழமான பிணைப்புடனும் புரிந்துணர்வுடனும் செயற்படுவது அவசியமானதாகும்.
உலக வாழ் இந்துக்களினால் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் இத்தீபத்திருநாள் அனைவருக்கும் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் ஒரு பண்டிகையாகவும் அவர்களது வாழ்வில் புத்தொளி வீசும் தீபத் திருநாளாகவும அமைய வாழ்த்துகிறேன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM