அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பள்ளிக்குடியிருப்பில் வாகன தரிப்பிடம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லீற்றர் டீசல் உடன் ஒருவரை இன்று வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கமைய அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.எம். எஸ். பண்டார விஜயதுங்கவின் வழிகாட்டலில் போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்பெக்டர் நூர்தீன் தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்களான 25125 அனஸ். 8313 நவீனகரன், 76811 சஞ்ஜீவ, 6494 கஜேந்திரன், 92878 அனோஜன், 4051 லதீப் ஆகியோர் கொண்ட பொலிஸ் குழுவினர் சம்பவதினமான இன்று மாலை 6 மணியளவில் குறித்த வாகன தரிப்பிட கட்டிடத்தை முற்றுகையிட்டு சோதனையிட்டனர்.
இதன்போது 3 தண்ணீர் தாங்கி பரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லீற்றர் டீசலை கைப்பற்றியதுடன் ஒருவரை கைது செய்தனர்
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM