புத்தளம் எலுவாங்குளம் கலா ஓயா பாலத்திற்கு அருகில் காட்டு யானை ஒன்று காயங்களுக்குள்ளாகிய நிலையில் காணப்பட்டதை அவதானித்த அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதிக்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்று காயங்களுக்குள்ளாகிய காட்டு யானையை பார்வையிட்டனர்.
இதன்போது கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் யானையின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி இதன்போது குறிப்பிட்டார்.
குறித்த ஸ காட்டுயானை 30 வயதுடையதாக மதிக்கப்பட்டுள்ளதாக இதன்போது அவர் தெரிவித்தார்
காயங்களுக்குள்ளாகிய காட்டு யானைக்கு நிகாவெரெட்டிய மிருக வைத்தியர்களினால் நாளை சிகிச்சையளிக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது தாய்க்கு காயம் ஏற்பட்டமையினால் குட்டியானை தனது தாயை விட்டு பிரியாமல் தாய்க்குப் பாதுகாப்பாக இருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM