கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்று கால முடக்க நிலையின் போது உலகளாவிய ரீதியில் இருதய பிரச்சினைக்குள்ளான நோயாளிகள் மத்தியிலான மரணங்கள் 17 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக பிரித்தானிய புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
பிரித்தானிய லீட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களால் சுமார் 299 தனிப்பட்ட ஆய்வுகளைப் பகுப்பாய்வு செய்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையான இரு வருட காலத்தில் கடுமையான இருதய பிரச்சினைக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களிடையேயான மரணங்கள் 17 சதவீதத்தால் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது..
அத்துடன் அக்காலப் பகுதியில் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவைச் சிகிச்சைகளின் எண்ணிக்கை 34 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. பல நோயாளிகள் தாம் கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகலாம் என்ற அச்சம் காரணமாக வைத்தியசாலைக்கு செல்வதை தவிர்த்து வந்திருந்தனர்.
பல நாடுகளில் மக்களை அதிகளவில் கொல்லும் நோய்கள் வரிசையில் முதலிடத்தில் இருதய நோய் உள்ளதாக தெரிவித்த மேற்படி ஆய்வில் பங்கேற்ற மருத்துவரான ரமேஷ் நடராஜா, கொவிட்-19 காலத்தில் மக்கள் உரிய இருதய கவனிப்பை பெறத் தவறியமை காரணமாகவே அதிகளவு மரணங்கள் இடம்பெற்றதாகக் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM