தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம் காத்தான் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த ஒரு கோடி மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளுடன் இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளதோடு ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம் காத்தான் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதப்படுத்தப்பட்ட சுமார் 200 கிலோ மதிப்புள்ள கடல் அட்டைகளை, வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.
இதன் போது பட்டணம் காத்தான் புறவழிச் சாலை பகுதியில் கேணிக்கரை பொலிஸார் இருவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில், ஒருவர் தப்பிச் சென்ற நிலையில், மற்றொருவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்ததால், விசாரணை செய்ததில் இலங்கைக்கு படகு மூலம் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்பட இருந்தமை தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவரிடம் இருந்த சுமார் 200 கிலோ மதிப்புள்ள ஒரு கோடி மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்து, மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM