நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (30) இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கிண்ணியா
திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் 1 கிராம் 650 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 22 வயதுடைய கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பேலியகொடை
பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினால் 65 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 32 வயதுடைய மருதானை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். பேலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
உப்புவெளி
உப்புவெளி - அந்தன்குளம் பிரதேசத்தில் 1 கிராம் 600 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 45 வயதுடைய உப்புவெளி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM