இலங்கை இராணுவத்தின் 24 ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, லெப்டினன்ட் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்படுவார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, புதிய இராணுவ தளபதிக்கான கடமைகளையும் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நாளையதினமே பொறுப்பேற்கவுள்ளார்.
அத்தோடு பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சவேந்திர சில்வா இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதோடு, பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக நாளையதினம் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்நிலையில், இரு இராணுவ அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM