அட்டலுகம சிறுமி எவ்வாறு கொலை செய்யப்பட்டார் - பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்

Published By: Digital Desk 4

30 May, 2022 | 08:03 PM
image

பண்டாரகம அட்டலுகம பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட 09 வயது சிறுமி பாத்திமா ஆயிஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த சிறுமி நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் பண்டாரகம, அட்டலுகம பிரதேசத்தில் இருந்து காணாமல்போனதாக கூறப்படும் 09 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ள நிலையிலேயே மேற்குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (27) தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்குச் சென்ற குறித்த சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோரால் பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.

பின்னர் மறுநாள் (28) குறித்த சிறுமியின் சடலம் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்படவில்லை அல்லது பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், பிரேத பரிசோதனை அறிக்கையில் சந்தேக நபரால் குறித்த சிறுமி வலுக்கட்டாயமாக நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்போது சிறுமியின் கொலை தொடர்பில் 29 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுதியபோது அவரை எதிர்வரும் 2 தினங்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இன்று கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அட்டலுகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் குறித்த சிறுமியின் தந்தையுடன் நெருக்கமாக பழகுபவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08