( எம்.எப்.எம்.பஸீர்)
மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் 14 நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.
இந் நிலையில் குறித்த 14 நாட்களுக்கு, தற்காலிகமாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக டி.ஜே. பலிஹக்கார பதில் கடமைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே 9 ஆம் திகதி மைனா கோ கம, கோட்டா கோ கம மீது அரசாங்க ஆதரவு போராட்டக் காரர்கள் நடாத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அதனை தடுக்காமை தொடர்பில் தேசபந்து தென்னகோன் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இது தொடர்பில் தேசபந்து தென்னகோனை சாட்சி இருப்பின் கைது செய்யவும், உடனடியாக மேல் மாகாணத்துக்கு வெளியே இடமாற்றவும் சட்ட மா அதிபர் சி.ஐ.டி. மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனையளித்திருந்தார்.
எனினும் அந்த ஆலோசனைகள் பிரகாரம் எதுவும் நடக்காத நிலையில், தேசபந்து தென்னகோன் இடமாற்றம் செய்யாமை தொடர்பில் நாளைமறுதினம் முதலாம் திகதி விளக்கமலிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே தேசபந்து தென்னகோன் 14 நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM