(எம்.மனோசித்ரா)
எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான டொலர் தேவை தொடர்பில் மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய ஜூன் மாதத்திற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு 554 மில்லியன் டொலர் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு தேவையான நிதியில் 100 மில்லியன் டொலர் இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ளப்படும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்தோடு இந்தியாவிடமிருந்து மேலும் 500 மில்லியன் டொலரை புதிய கடன் திட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் மத்திய வங்கி ஆளுனருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பெற்றோலியப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக பல தரப்பட்ட பேச்சுவார்த்தைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM