வடக்கில் செயற்படும் வாள்வெட்டு கும்பலான ஆவா குழுவை எதிர்கொள்வதற்கு புதிய குழு அமைக்க உள்ளதாக ராவண பலய அமைப்பு தெரிவித்துள்ளது. வடக்கில் பாதுகாப்பு படைகளை தாக்கும் ஆவா குழு உறுப்பினர்கள் யாரும் இது வரையில் கைது செய்யப்படாத நிலையில் நாட்டின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது என ராவண பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
அண்மைக்காலமாக வடக்கில் மிகவும் மோசமான சூழல் காணப்படுகின்றது. ஆவா என்ற வாள்வெட்டு குழுவின் செயற்பாடுகள் காரணமாக அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு முக்கியமானதாகும். ஆனால் அந்த குழுவில் யாரும் இதுவரையில் கைது செய்யப்பட வில்லை .
ஆகவே உடனடியாக பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் . அதே போன்று குறித்த ஆவா குழு தொடர்பாக அவதானிக்க ராவணா பலய புதிய குழுவை ஸ்தாபிக்க உள்ளது. ஏனென்றால் வடக்கில் கடமையில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளை இனம் தெரியாத குழு தாக்குகின்றது என்றால் அதனை வேடிக்கை பார்க்க முடியாது.
அரசாங்கம் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. அவ்வாறு கருத்தில் கொண்டிருந்தால் ஆவா குழுவை கைது செய்திருக்க முடியும். எவ்வாறாயினும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது எமது கடமை யாகும் என குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM