தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளோமாதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க கோரி பிரேரணை

Published By: Robert

28 Oct, 2016 | 09:14 AM
image

தேசிய ஆங்கில டிப்ளோமாதாரிகளை ஆங்கில ஆசிரியர்களாக நேர்முகப்பரீட்சையின் மூலம் உள்வாங்க கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழுத் தலைவருமான ஆர்.எம்.அன்வர் நேற்று நடைபெற்ற மாதாந்த கிழக்கு மாகாண சபை அமர்வின்போது பிரேரணை ஒன்றினை முன்வைத்தார்.

குறித்த பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய அவர்,

கிழக்கு மாகாணத்தில் ஆளுநரின் கீழுள்ள பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்படும் பரீட்சைகள் அதன் மூலம் வழங்கப்படும் நியமனங்கள் தொடர்பில் அண்மைக்காலமாக திருப்தியற்ற நிலைமைகள் காணப்படுகின்றன. இவற்றை கிழக்கு மாகாண சபை அனுமதிக்க முடியாது.

அண்மையில் ஆங்கில பாட ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளும் போட்டிப் பரீட்சையில் குறித்த தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளோமாதாரி ஆங்கில ஆசிரியர்களையும் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை குறித்து கிழக்கு மாகாணத்திற்கு மட்டும் ஒரு விதமாகவும் வட மற்றும் வட மத்திய மாகாணங்களில் வெறுமனே நேர்முகப்பரீட்சயின் மூலமும் தோற்றி ஆங்கில ஆசிரியர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

வட மத்திய மாகாணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 1000 பூக்கள் மலரட்டும் என்ற தொனிப்பொருளில் 1000 ஆசிரியர்கள் உள்வாங்கப்பட்ட நிலையில் அவற்றில் 74 தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளோமாதாரிகளை நேர்முகப்பரீட்சையினாலே உள்வாங்கப்பட்ட நிலையில் வட மாகாணத்திலும் அவ்வாறே சேர்ந்துகொள்ளப்பட்ட நிலையிலும் கிழக்கிலுள்ளவர்களையும் உள்வாங்க கிழக்கு மாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிழக்கு மாகாண சபை ஒரு பொறிமுறையின் கீழ் கொண்டு செல்லப்படுகின்ற அதேவேளை ஆளுநரின் கீழுள்ள பொதுச் சேவை ஆணைக்குழு மாத்திரம் சுயமாக இயங்குவது எந்த வகையிலும் பொருத்தமற்றது. எனவே முதலமைச்சரும், அமைச்சர் வாரியமும் சரியான ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டும். குறித்த ஆங்கில டிப்ளோமாதாரிகள் 3 வருட கற்கை நெறியை முடித்து 6 மாதகாலம் பயிற்சிக்காக அரச பாடசாலைகளில் நியமிக்கப்பட்டு தரமான ஆங்கில ஆசிரியர்களாக வெளிவருகின்ற அவர்களுக்கு ஆங்கில துறை சார்ந்த நியமனத்தை தவிர வேறு ஒன்றுமே பெறமுடியாத நிலையில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதே சிறந்தது.

பொதுச் சேவை ஆணைக்குழுவினால் விண்ணப்பங்கள் கோரப்படுகின்ற போது கிழக்கு மாகாணத்தில் மாத்திரமே வெளி மாகாணத்திலுள்ள பட்டதாரிகள் மற்றும் தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளோமாதாரிகளை உள்வாங்குவதனால் கிழக்கு மாகாண பட்டதாரிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகின்றது. அவ்வாறே வெளி மாகாணங்களில் விண்ணப்பங்கள் கோரும்போது கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் உள்ளீர்க்கப்படாதபோது கிழக்கு மாகாணம் மட்டும் என்ன விதி விலக்கா என்ற கேள்வியையும் எழுப்பினார் அன்வர்;.

2013ஆம் ஆண்டின் கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கான 1134 வெற்றிடங்களில் ஆங்கில பாடத்திற்க்காக 478 வைத்துக்கொண்டு நடை முறைப்படுத்துவது ஒரு புறம் 2016 ஆண்டிற்கான 652 ஆங்கில ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபெற்ற போட்டிப்பரீட்சையின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 390 ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் கணிதம் போன்ற பாடங்களுக்கான பட்டதாரிகளில் 167 பேர் ஆங்கில ஆசிரியர்களுக்காகவும் அவற்றில் வெளி மாவட்டங்களுக்கு 140 பேரும் திருகோணமலைக்கு வெறுமனே 22 பேர் மாத்திரமே தெரிவுசெய்யப்பட்ட நிலையில் உள்ளது.

எனவே குறித்த தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளோமாதாரிகளை ஆங்கில ஆசிரியர்களாக நேர்முகப்பரீட்சையின் மூலம் உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தொடர்ந்து கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் வாரியத்தோடு இணைந்து ஆலோசனைகளை பெற்று இயங்கவேண்டுமெனவும் சபை தீர்மானத்தை நிறைவேற்ற கேட்டுக்கொண்டார்.

பின்னர் முதலமைச்;சர் பதில் அழைத்து பேசுகையில், குறித்த விடயம் தொடர்பாக உரிய கவனம் எடுக்கப்படும் எனவும் இது விடயமாக தான் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவோடு விரைவில் சந்திப்பொன்றை மேற்கொள்வதுடன் கிழக்கு மாகாண ஆளூநரோடும் பேசி தீர்மானத்தை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் முதலமைச்சர் கேட்போர் கூடத்தில் தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளோமாதாரிகளை சந்தித்து பேசிய அவர,; குறித்த விடயம் தொடர்பாக கூடிய கவனம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

-அப்துல் கையூம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08