இலங்கைக்கு மருந்துகளை நன்கொடையாக வழங்கியது பிரான்ஸ்

Published By: Digital Desk 3

27 May, 2022 | 04:13 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டினைக் கருத்திற் கொண்டு 3 இலட்சம் யூரோ பெறுமதியுடைய மருந்துகளை பிரான்ஸ் நன்கொடையாக வழங்கியுள்ளது. 

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவாடு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் இடம்பெற்ற போதே குறித்த மருந்து தொகை கையளிக்கப்பட்டன.

இதன் போது இலங்கையின் சுகாதார சேவைக்கு தேவையான 3 இலட்சம் யூரோ பெறுமதியுடைய அத்தியாவசிய மருந்துகள் பிரான்ஸினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. சுவாச நோய் மற்றும் மயக்க மருந்து என்பனவே இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்டன.

நெருக்கடியான நிலைமையில் இலங்கைக்கு உதவ முடிந்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக பிரான்ஸ் தூதுவர் இதன் போது தெரிவித்தார். எதிர்காலத்திலும் இவ்வாறான ஒத்துழைப்புக்களை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் சுகாதார சேவையை வழமையைப் போன்று முன்னெடுத்துச் செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் , அதற்கு தேவையான மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், விநியோக துறைக்கு இடையூறு ஏற்படாத வகையிலான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

                                                                                                                                              

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35