இந்தியாவிடமிருந்து மேலும் 1.5 பில்லியன் டொலர்களைப் பெறும் எதிர்பார்ப்பில் இலங்கை - மத்திய வங்கி ஆளுநர்

Published By: Vishnu

27 May, 2022 | 01:30 PM
image

(நா.தனுஜா)

இந்தியாவிடமிருந்து பரஸ்பர பரிமாற்றல் வசதி அடிப்படையில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், ஆசிய ஒத்துழைப்பு ஒன்றிணைவின் ஒத்திவைக்கப்பட்ட ஒதுக்கீடுகளிலிருந்து மற்றுமொரு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்ப்பதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசிய ஒத்துழைப்பு ஒன்றிணைவின்கீழ் இறக்குமதிகளுக்காக இலங்கையால் இந்தியாவிற்குச் செலுத்தப்படவேண்டியுள்ள 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களையே இந்தியா மேற்கண்டவாறு ஒத்திவைத்துள்ளது.

இலங்கையைச்சேர்ந்த இறக்குமதியாளர்கள் ஒவ்வொரு இருமாதங்களுக்கும் இந்தியாவிற்குச் செலுத்தவேண்டிய 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை மத்திய வங்கிக்குச் செலுத்துகின்றனர்.

அவ்வாறு செலுத்தப்படும் கொடுப்பனவுகளை ஒத்திவைப்பதற்கு இந்தியா இணங்கியுள்ளது என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு மேலதிகமாக இந்தியாவிடமிருந்து பரஸ்பர பரிமாற்றல் வசதி அடிப்படையில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும், இருப்பினும் இது இன்னமும் கலந்துரையாடல் மட்டத்திலேயே காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவினால் எரிபொருள் கொள்வனவிற்காக கடனடிப்படையில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டதாகவும் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47