நல்லாட்சி என கூறி மக்களை அரசாங்கம் ஏமாற்றுகின்றது : பதுளையில் ஒன்றிணைந்த எதிர்க் கட்சி தெரிவிப்பு

Published By: MD.Lucias

27 Oct, 2016 | 04:58 PM
image

நல்லாட்சி என்று கூறிக்கொண்டு, இவ் அரசு நாட்டு மக்களை படுமோஷமாக ஏமாற்றி வருகின்றது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. நாடு எவ்வித அபிவிருத்தியுமின்றி படுபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குனவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா தேசிய மக்கள் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா தேசிய தொழிற்சங்கம் ஆகியன ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் வைபவரீதியாக இணைந்து செயல்படும் நிகழ்வு இன்று பண்டாரவளை ஸ்ரீ பத்ரகாளியம்மன் தேவஸ்தான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தினேஸ் குனவர்தன எம்.பி. கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். 

“ தற்போதைய நிலையில் ஆட்சி செய்யும் அரசு, வங்கரோத்து ஆட்சியையே நடாத்துகின்றது. எமது நாட்டு வரலாற்றில் இதுபோன்றதோர் அரசு  என்றுமே இருந்ததில்லை. 

இவ்வரசில் ஸ்தீரமானதோர் நிலையின்மையினால், சர்வதேச நாட்டினர் எவரும் இங்கு முதலீடு செய்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். 

ஆனால், ஆட்சியாளர்களோ, சர்வதேச நாடுகள் எமது நாட்டில் முதலீடு செய்வதற்கு வர ஆயத்தமாகவுள்ளனரென்று தம்பட்டம் அடிக்கின்றனர். 

இது வரை எவருமே, எமது நாட்டில் முதலீடுகள் எதுவும் செய்யவில்லை. 

எமது நாட்டின் மத்திய வங்கியில் பில்லியன் கணக்கான ரூபா நிதியில் ஊழல் , மோசடி  இடம்பெற்றிருப்பமை, பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடாத்த தயங்குகின்றது. நாடு வங்கரோத்து நிலையினை எதிர்கொண்டுள்ளது. 

வெகுவிரைவில் அரிசிக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவப்போகின்றது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27