அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் பிரிவில் நொங்கு வியாபாரம் செய்யும் சகோதர முறையான இருவருக்கிடையில் நேற்றிரவு (24) ஏற்பட்ட கைகலப்பில் வெட்டுக்காயங்களுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அக்கரைப்பற்று இத்தியடிப் பிரதேசத்தில் வசித்துவந்த 3 பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய கு.குணதாஸ் என அடையாளம் காணப்பட்டார்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தில் காயமடைந்த நபர் 36 வயதுடையவர் என்பதோடு, அவர் தற்போது பொலிஸ் பாதுகாப்புடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் உடற்கூறாய்வு பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இரு சகோதார முறையானவர்களும், பனை நொங்கு விற்பனையில் ஈடுபட்டு வருகின்றவர்கள் என்பதுடன் இருவருக்குமிடையில் இதுபோன்ற கைகலப்பு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு ஏற்பட்ட கைகலப்பில் இருவரும் பலத்த சண்டையில் ஈடுபட்டுள்ளதுடன் கூரிய கோடரி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தியும் சண்டையில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளின் ஊடாக தெரியவருகிறது.
இது தொடர்பான விசாரணையை அக்கரைப்பற்று பெருங்குற்றத்தடுப்பு பொலிஸார் மற்றும் அம்பாறை விசேட தடயவியல் பொலிஸார் ஆகியோர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM