(நா.தனுஜா)
தற்போதைய சூழ்நிலையில் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுவதன் மூலம் ராஜபக்ஷ குடும்பத்தைப் பாதுகாப்பதா? இல்லாவிட்டால் நாட்டுமக்களின் நலனை முன்னிறுத்திய கொள்கையை அடிப்படையாகக்கொண்ட அரசியலில் ஈடுபடுவதா? என்ற கேள்வி எழும்போது, ராஜபக்ஷ குடும்பத்தின் பாதுகாப்பு அதிகாரிகளாகச் செயற்படுவர்களுடன் நான் ஒருபோதும் இணையமாட்டேன் என்ற தீர்மானத்தையே மேற்கொள்வேன் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
ஒட்டுமொத்த நாடும் மாற்றத்தை எதிர்பார்க்கின்ற தருணத்தில், அதற்கு மாறான விடயங்களே நடைபெறுகின்றன.
கடந்த காலங்களில் ஊழல்களில் ஈடுபட்டவர்களின் விபரங்கள் கோப் குழுவின் அறிக்கையூடாக வெளியிடப்படும் தற்போதைய சூழ்நிலையில், திருடர்களையும் ஊழல்வாதிகளையும் பாதுகாப்பதிலேயே அரசாங்கம் அவதானம் செலுத்துகின்றது. மக்கள் உயிர்வாழ்வதற்குரிய தமது உரிமையையே கோருகின்றனர்.
ஆனால் தூரநோக்கற்றதும், செயற்திறனற்றதுமான தீர்மானங்களால் சிறுகுழந்தைக்குக்கூட உயிர்வாழமுடியாத நிலையேற்பட்டிருக்கின்றது. நாடு தள்ளப்பட்டிருக்கும் இந்த நிலைக்கு முன்னாள் நாம் எதனையும் பேசாமல் அமைதியாக இருக்கவேண்டுமா?
தற்போதைய சூழ்நிலையில் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுவதன் மூலம் ராஜபக்ஷ குடும்பத்தைப் பாதுகாப்பதா? இல்லாவிட்டால் நாட்டுமக்களின் நலனை முன்னிறுத்திய கொள்கையை அடிப்படையாகக்கொண்ட அரசியலில் ஈடுபடுவதா? இவ்விடயத்தில் முக்கியமான தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம்.
நான் பிரதமர் பதவியை நிராகரித்தேன். நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் முன்னெடுத்துவரும் போராட்டங்களைக் காட்டிக்கொடுக்காமல், அவர்களை வெற்றிபெறச்செய்யவேண்டும் என்பதற்காகவே நான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே ராஜபக்ஷ குடும்பத்தின் பிரதான பாதுகாப்பு அதிகாரி உள்ளடங்கலாக அக்குடும்பத்தைப் பாதுகாப்பவர்களின் கூட்டணியின் என்னை இணையுமாறு கோரவேண்டாம். அதனைச்செய்வதற்கு நான் ஒருபோதும் தயாரில்லை.
ஆனால் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழித்து, அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதன் ஊடாக ஸ்தாபிக்கப்படும் அரசாங்கத்திற்குத் தலைமை தாங்குவதன் மூலம் நாட்டுமக்களுக்கு சேவையாற்ற நான் தயாராக இருக்கின்றேன். புதியதொரு அரசியல் கலாசாரத்திற்கும், அரசியல் பயணத்திற்கும் நாம் தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM