பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மின்சார சபையை தனியார் மயப்படுத்தப்போவதில்லை - காஞ்சன விஜேசேகர

Published By: Vishnu

24 May, 2022 | 08:31 PM
image

(எம்.மனோசித்ரா)

பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சாரசபை ஆகியவற்றை தனியார் மயப்படுத்துவது தொடர்பான எவ்வித கலந்துரையாடல்களும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை.

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை அரச - தனியார் கூட்டு முயற்சியான்மையின் கீழ் மேம்படுத்தவே எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவை இணை பேச்சாளர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை அரச - தனியார் கூட்டு முயற்சியான்மையில் மேம்படுத்த வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தையோ அல்லது இலங்கை மின்சாரசபையையோ தனியார் மயப்படுத்துவது தொடர்பில் இது வரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

மாறாக இவை இரண்டினதும் செலவுகளைக் குறைத்து மக்களுக்கு தொடர் சேவைகளை வழங்கக் கூடிய சிறந்த நிறுவனங்களாகவே மாற்றுவதற்கு முயற்சிக்கின்றோம் என்று தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13