(எம்.மனோசித்ரா)
பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சாரசபை ஆகியவற்றை தனியார் மயப்படுத்துவது தொடர்பான எவ்வித கலந்துரையாடல்களும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை.
நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை அரச - தனியார் கூட்டு முயற்சியான்மையின் கீழ் மேம்படுத்தவே எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவை இணை பேச்சாளர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை அரச - தனியார் கூட்டு முயற்சியான்மையில் மேம்படுத்த வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தையோ அல்லது இலங்கை மின்சாரசபையையோ தனியார் மயப்படுத்துவது தொடர்பில் இது வரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
மாறாக இவை இரண்டினதும் செலவுகளைக் குறைத்து மக்களுக்கு தொடர் சேவைகளை வழங்கக் கூடிய சிறந்த நிறுவனங்களாகவே மாற்றுவதற்கு முயற்சிக்கின்றோம் என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM