யுத்தத்திற்கு பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் ஜனநாயகத்தை பலப்படுத்தியிருந்தால் இன்று விசேடமாக அப்பகுதிகளை கவனத்திற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. தமிழ் மக்களின் உரிமைகளை வென்று கொடுப்பதே இன்று எமக்கு மிக முக்கிய கடமையாக உள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் தேசிய பாதுகாப்பையும் தொடர்புபடுத்தி இனவாதம் பேச வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ள நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;
வடக்கிலும் கிழக்கிலும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளை அனைவரும் வரவேற்கின்றனர். கடந்த காலத்தில் அரசாங்கம் தமிழ்ப் பிரதேசங்களை சரியாக கவனத்திற் கொள்ளாத நிலையில் இன்று ஜனாதிபதியும் பிரதமரும் ஜனநாயக செயற்பாடுகளைச் சரியாகக் கையாண்டு வருகின்றனர் எனவும் எமது செயற்பாடுகளில் குறை கண்டு விமர்சிக்கவென்றே ஒரு அணியினர் இயங்கிக் கொண்டுள்ளனர்.
கடந்த காலத்தில் குறிப்பாக யுத்தத்தின் பின்னர் வடக்கையும் கிழக்கையும் கவனத்திற் கொண்டு அப்பகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு பூர்த்தி செய்திருந்தால் இன்று நாம் விசேடமாக அவர்களை கவனத்திற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. ஆனால் யுத்தம் முடிவிற்கு வந்தவுடன் இலங்கையில் தமிழர்கள் வாழ்கின்றனர் என்பதையே மஹிந்த அரசாங்கம் மறந்துவிட்டது.
ஆகவே இன்று தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய மிகப் பெரிய தேவை உள்ளது. பொது மக்களிடம் இருந்து அபகரித்த நிலங்களை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் பாடசாலைகளை சீரமைத்துக் கொடுக்க வேண்டும். அதேபோல் அவர்கள் உரிமைகளை பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் மிக முக்கிய செயற்பாடாகும். அன்று அரசாங்கம் இந்த விடயங்களைச் செய்யத் தவறியமையே இன்றுவரை நாம் சர்வதேச நாடுகளுக்கு பதில் கூற வேண்டிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இப்போது அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விமர்சிக்கும் நபர்கள் தான் இன்று நாடு சிக்கலை எதிர்கொள்ள காரணமானவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
அதேபோல் இனவாதத்தில் அரசியல் செய்பவர்களுக்கு ஜனநாயகம் என்ற பாதை கடினமானதாகவே இருக்கும். ஆகவே மஹிந்த அணியினர் இன்னும் தமது நிலைப்பாட்டில் இருந்து மாறாது செயற்பட்டு வருகின்றனர். இப்போதும் இனவாதம் பேசி மக்களின் ஒற்றுமையினை சீர்குலைத்துவிட வேண்டாம் என்பதையே இவர்களுக்கு கூற விரும்புகின்றோம். இந்த அரசாங்கம் இனவாதம் இல்லாது மூவின மக்களையும் ஒன்றிணைத்தே பயணிக்கின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM