(என்.வீ.ஏ.)
இந்தியாவில் திங்கட்கிழமை (23) ஆரம்பமான 3 அணிகளுக்கு இடையிலான மகளிர் ரி 20 செலஞ் கிரிக்கெட் போட்டியில் சுப்பர்நோவாஸ் முதலாவது வெற்றியை ஈட்டியது.
ட்ரெய்ல்ப்ளேஸர்ஸுக்கு எதிராக புனே, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சகல துறைகளிலும் திறமையை வெளிப்படுத்திய சுப்பர்நோவாஸ் 49 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
சுப்பர்நோவாஸ் வீராங்கனைகளின் 'சுப்பரான' பிடி எடுப்புகள் இந்த வெற்றியில் பிரதான பங்காற்றின என்று கூறினால் மிகையாகாது. மிகவும் சிரமமான ஒரே ஒரு பிடியைத் தவிர மற்றைய சிரமமான பிடிகள் அனைத்தையும் சுப்பர்நோவாஸ் வீராங்கனைகள் தாவிப் பிடித்தமை பிரமிக்கவைத்தன.
அப் போட்டியில் சுப்பர்நோவாஸினால் நிர்ணயிக்கப்பட்ட 164 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ட்ரெய்ல்ப்ளேஸர்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
அணித் தலைவி ஸ்ம்ரித்தி மந்தானா (34), ஹெய்லி மெத்யூஸ் (14) ஆகிய இருவரும் 5 ஓவர்களில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
அவர்கள் இருவரும் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து ஜெமிமா ரொட்றிகஸ் 24 ஓட்டங்களைப் பெற்றார்.
எவ்வாறாயினும் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 8 விக்கெட்களை இழந்த ட்ரெய்ல்ப்ளேஸர்ஸ் தோல்வியைத் தழுவியது.
10ஆம் இலக்க வீரர்ங்கனை ரேணுகா சிங் (14 ஆ.இ.), ராஜேஷ்வரி கய்க்வாட் (7 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத கடைசி விக்கெட்டில் 20 ஓட்டங்களைப் பகிர்ந்திராவிட்டால் ட்ரெய்ல்ப்ளேஸர்ஸ் 100 ஓட்டங்களைக் கடந்திருக்காது.
சுப்பர்நோவாஸ் அணியில் பிரியா பூணியா, ஹார்லீன் டியோல் ஆகிய இருவரும் முன்னோக்கிப் பாய்ந்து தலா 2 சிரமமான பிடிகளை எடுத்தமை பிரமிக்கவைத்தன.
பந்துவீச்சில் பூஜா வஸ்த்ரேக்கார் 4 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் சொபியா எக்லஸ்டோன் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அலனா கிங் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த சுப்பர்நோவாஸ் 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது.
பிரியா பூணியா (22), டியேந்த்ர டொட்டின் (17 பந்துகளில் 32) ஆகிய இருவரும் 5 ஓவர்களில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். டொட்டின் அநாவசியமாக ரன் அவுட் ஆனார்.
13 ஓட்டங்கள் கழித்து பிரியா பூணியா ஆட்டமிழந்தார்.
துடுப்பாட்டத்தில் ஹார்லீன் டியோல் (19 பந்துகளில் 35), அணித் தலைவர் ஹார்மன்ப்ரீத் கோர் (37), சுனே லூயிஸ் (10), பூஜா வஸ்த்ரேக்கார் (14) ஆகியோரும் அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர்.
பந்துவீச்சில் ஹெய்லி மெத்யூஸ் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சல்மா காத்துன் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM