சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 520 கிலோ கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சப்புகஸ்கந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சிறிய ரக லொறி ஒன்றின் மூலம் 520 கிலோ 198 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் கடத்த முற்பட்ட சந்தேக நபர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் 32 வயதுடைய பதுளை பிரதேசத்தைச் பெண் ஒருவரும் 34 வயதுடைய தலங்கமை பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரும் ஆவார்.
சந்தேக நபர்களிடமிருந்து அதி சொகுசு கார்கள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் சப்புகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM