கேரள கஞ்சாவுடன் இருவர் கைது : இரு சொகுசு கார்களும் மீட்பு

Published By: Vishnu

23 May, 2022 | 03:43 PM
image

சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 520 கிலோ கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சப்புகஸ்கந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சிறிய ரக லொறி ஒன்றின் மூலம் 520 கிலோ 198 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் கடத்த முற்பட்ட சந்தேக நபர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் 32 வயதுடைய பதுளை பிரதேசத்தைச் பெண் ஒருவரும் 34 வயதுடைய தலங்கமை பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரும் ஆவார்.

சந்தேக நபர்களிடமிருந்து அதி சொகுசு கார்கள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு  தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் சப்புகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27