(எம்.மனோசித்ரா)
நாடளாவிய ரீதியிலுள்ள சகல எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும் எரிபொருள், எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான வரிசைகள் நாளாந்தம் நீண்டு கொண்டே செல்வதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இவ்வாறு வரிசைகளில் காத்திருக்கும் மக்கள் இறுதி நேரத்தில் எரிபொருள் கிடைக்கப் பெறாமையினால் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு , குறித்த பகுதிகளில் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நள்ளிரவில் எரிபொருள் நிறைவடைந்த நிலையில் , முத்துராஜவெல முனையத்திலிருந்து எரிபொருளை விநியோகிக்கும் பணிகள் இரவிரவாக முன்னெடுக்கப்பட்டன.
இன்று விடுமுறை தினம் என்ற போதிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் முன்னெடுக்கப்பட்டதாகவும் , 85 000 சிலிண்டர்கள் சந்தைகளுக்கு வழங்கப்பட்டதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதே வேளை இன்றைய தினம் மேலும் இரு சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு 7 மில்லியன் டொலர் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் கொழும்பு - கொச்சிக்கடையில் சமையல் எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த போதிலும் அதனைப் பெற்றுக் கொள்ள முடியாமையால் , மட்டக்குளி - புறக்கோட்டை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனால் குறித்த வீதியூடான போக்குவரத்துக்கள் சில மணித்தியாலங்களுக்கு ஸ்தம்பிதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM