( எம்.எப்.எம்.பஸீர்)
குருணாகல் மாவத்தகம – பரகஹதெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அஞ்சு எனும் புனைப் பெயரால் அறியப்படும் 48 வயதான மொஹம்மட் கஸ்ஸாலி என்பவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினர்.
நேற்று (21) இரவு 11.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்த நபர், மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டுள்ள குறித்த நபரின் வீட்டில் நேற்று கிரியை ஒன்று இடம்பெற்றுள்ளதுடன், அதனிடையே இந்த துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் விசாரணைகளை ஆரம்பித்த மாவத்த கம பொலிசார் இன்று 7 பேரைக் கைது செய்தனர்.
குறித்த கிரியைகளுக்காக வந்த பெண் ஒருவர் உள்ளிட்ட 4 பேரையும், கிரியைகளிடையே முச்சக்கர வண்டியொன்றில் அங்கு வந்து சென்ற மூவரையுமே பொலிசார் இவ்வாறு கைது செய்துள்ளனர்
இந்நிலையில் குறித்த கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM