மே 9 வன்முறைகள் : 1500 பேர் இதுவரை கைது - 677 பேருக்கு விளக்கமறியல்

Published By: Digital Desk 4

22 May, 2022 | 04:23 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

“கோட்டா கோ கம”, “மைனா கோகம” அமைதி போராட்டத்தில்  அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டமையை தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறைகள் ( மே 9 வன்முறைகள் ) தொடர்பில் இன்று ( 22) நண்பகலாகும் போது  சுமார் 1500 பேரை  பொலிஸார் நாடளாவிய ரீதியில் கைது செய்திருந்தனர்.  

மே 9 வன்முறைகள் தொடர்பில் 827 முறைப்பாடுகள் : 1220 சந்தேகநபர்கள் கைது |  Virakesari.lk

நாடளாவிய ரீதியில்  இதுவரை பதிவானதாக 844 சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில்,  அவை தொடர்பில்  இவர்களைக் கைது செய்ததாக  பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார். 

இந் நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்ட 1500 பேரில் இன்று நண்பகல் 12.00 மணி வரை நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டு 677 பேர்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.`

 இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும்  152 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 101 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 39 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

9 ஆம் திகதி பதிவான வன்முறைகளின் ஆரம்ப புள்ளியான, “கோட்டா கோ கம” மற்றும் “மைனா கோ கம”  மீதான அத்து மீறிய தாக்குதல்கள் தொடர்பில்  சி.ஐ.டி.யின்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சரத் சந்ரவின் கீழ் இடம்பெறுகிறது. இந் நிலையிலேயே அது தவிர்த்த ஏனைய வன்முறை சம்பவங்கள் தொடர்பில்  மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கலின் கீழும் மாவட்டங்களின் பிரதிபொ பொலிஸ் மா அதிபரின் கீழும் அவ்வந்த பொலிஸ் பிரிவுகளின் குற்றத் தடுப்புப்  பிரிவுகளினால் விசாரணைகள் இடம்பெறும் நிலையில் இந்த  1500 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 எவ்வாறாயினும் அரசியவாதிகள் வீடுகள், சொத்துக்களுக்கு சேதம் விலைவித்தமை தொடர்பிலேயே பெரும்பாலான கைதுகள் இடம்பெற்றுள்ளதுடன்,  குறித்த அரசியல்வாதிகளின் சிபாரிசின் பேரில் நியமிக்கப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகள், அரசியல்வாதிகளின் தேவைக்கு அமைய அப்பாவிகள் பலரைக் கைது செய்துள்ளதாக  சட்டத்தரணிகள் பலர் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46