மின்கட்டணத்தை குறைந்தப்பட்சமேனும் அதிகரிக்காவிடில் பெரும் நட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் - இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு

Published By: Vishnu

22 May, 2022 | 08:13 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மின்னுற்பத்திக்கான கேள்வி அதிகரித்துள்ள பின்னணியில் மின்கட்டணத்தை குறைந்தப்பட்சமேனும் அதிகரிக்காவிடின் 250 பில்லியன் ரூபா நட்டத்தை அரசாங்கம் எதிர்க்கொள்ள நேரிடும்.மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் மக்களிடம் கருத்து கணிப்பு கோரப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (22.05.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

டொலர் பற்றாக்குறை காரணமாகவே எரிபொருள் கொள்வனவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருளை தடையின்றி விநியோகிக்க இலங்கை மின்சார சபை உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து மின்விநியோக தடை 3மணித்தியாலங்கள் அளவு மட்டுப்படுத்தப்பட்டது.

கடந்த காலத்தை காட்டிலும் மின்னுற்பத்திக்கான கேள்வி அதிகரித்துள்ளது.மின்கட்டணத்தை அதிகரிப்பது குறித்த யோசனையை அரசாங்கம்  கொள்கை அடிப்படையில் முன்னெடுக்க வேண்டும்.

2014ஆம் ஆண்டு காலத்திற்கு பிறகு மின்கட்டணமும் அதிகரிக்கப்படவில்லை,தேசிய மின்னுற்பத்தி கட்டமைப்பிற்கு புதிதாக மின்நிலையங்களும் இணைத்துக்கொள்ளப்படாத காரணத்தினால் மின்னுற்பத்தி மற்றும் மின்விநியோக கட்டமைப்பு பாரிய சவால்களை எதிர்க்கொண்டுள்ளது.

மின்னுற்பத்திக்கான கேள்வி நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலைமையில் மின்கட்டணத்தை குறைந்தப்பட்சமேனும் அதிகரிக்காவிடின் 250 பில்லியன் நட்டத்தை அரசாங்கம் எதிர்க்கொள்ள நேரிடும்.

ஆகவே மின்கட்டண அதிகரிப்பு குறித்து அரசாங்கம் கொள்கை ரீதியிலான தீர்மானத்தை விரைவில் முன்னெடுக்க வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களின் விலையை நள்ளிரவில் அதிகரிப்பதை போன்று மின்கட்டணத்தை நள்ளிரவில் அதிகரிக்க முடியாது.மின்கட்டண அதிகரிப்பு குறித்து பொதுபயன்பாட்டு ஆணைக்குழு முறையான பரிந்துரைகளை முன்னெடுக்கும்.மின்கட்டண அதிகரிப்பு குறித்து பொது மக்களிடம் கருத்து கணிப்பு கோரப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33