பொலிஸ் மா அதிபரிடம் சி.ஐ.டி.யினர் விசாரணை : மேல் மாகாண பொலிஸ் பிரதானி நடாத்திய ' சூம் ' கலந்துரையாடல் குறித்தும் அவதானம்

21 May, 2022 | 09:31 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவிடம் சி.ஐ.டி.யினர் இன்று ( 21) சிறப்பு விசாரணைகளை நடாத்தியுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதலை தடுப்பதற்குத் தவறியமை தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளின் ஒரு அங்கமாக இந்த விசாரணைகள் நடாத்தப்பட்டு, பொலிஸ் மா அதிபரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சி.ஐ.டி.யினரால் கடந்த  17 ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவர் வழங்கிய வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை மையப்படுத்தி இந்த விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளன.

 அதன்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சி.ஐ.டி.யில் ஆஜரான பொலிஸ் மா அதிபர்  சந்தன விக்ரமரத்னவிடம் நீண்ட வாக்கு மூலம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

 முன்னதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சி.ஐ.டி..க்கு வழங்கியதாக கூறப்படும் வாக்கு மூலத்தில்,  பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமையவே, கோட்டா கோ கம மீது தாக்குதல் நடாத்த வந்தவர்களை தடுக்காமல் இருந்ததாக குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகிறது.

 இவ்வாறான நிலையில் அவரின் வாக்கு மூலத்தின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்திக் கொள்ள பொலிஸ் மா அதிபரிடம் இவ்வாறு வாக்கு மூலம் பெறப்பட்டதாக விசாரணைகளை கையாளும் சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

 இதனிடையே, இன்று ( 21) பொலிஸ் மா அதிபருக்கு மேலதிகமாக,  பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி பிரதிப் பொலிஸ்  மா அதிபர் வருண ஜயசுந்தர மற்றும் பொலிஸ்  விஷேட நடவடிக்கை பணியகத்தின் பிரதானி பிரதிப் பொலிஸ்  மா அதிபர்  டி.சி.ஏ. தனபால ஆகியோரிடமும் சி.ஐ.டி.யினர் வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.

குறிப்பாக , மைனா கோ கம, கோட்டா கோ கம தாக்குதல்களை தடுக்காமை, கடமையை தவறியமை தொடர்பில் பொலிஸ்  அதிகாரிகளுக்கு எதிராக இடம்பெறும் விசாரணைகளில், சாட்சிப் பதிவாக இந்த  வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக அறிய முடிகிறது.

இந்த சம்பவங்களின் போது அதிரடிப் படையினர் செயற்பட்ட விதம் தொடர்பில் அதிரடிப் படை கட்டளைத் தளபதியிடமும்,  முன் கூட்டியே வழங்கிய தகவல்கள் தொடர்பில் பொலிஸ் விஷேட நடவடிக்கை பணியக பிரதானியிடம்  வாக்கு மூலம் பெறப்பட்டதாக  சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.

இதனிடையே, இந்த விசாரணைகளில் கடந்த 9 ஆம் திகதி காலை வேளையில் கொழும்பு பொலிஸ் பிரதானிகளிடையே இடம்பெற்றதாக கூறப்படும்  சூம் கலந்துரையாடல் ஒன்று தொடர்பிலும் சி.ஐ.டி.யின்  அவதானம் திரும்பியுள்ளது. 

கொழும்பு பொலிஸ்  உயர் அதிகாரிகளிடையே நடந்த அந்த கலந்துரையாடலில் பேசியுள்ள பொலிஸ்  பிரதானி ஒருவர்,  தனது கட்டளை வரும் வறை ஒரு சொட்டு தண்ணீர் பிரயோகம் கூட செய்யக் கூடாது என பொலிஸ் அதிகாரிகளை  எச்சரித்துள்ளார். 

அத்துடன் இதற்கு முன்னர் தன்னை மீறி தண்ணீர் பிரயோகம் செய்த பொலிஸ் மேலதிக படைப் பிரிவின் கட்டளை அதிகாரியை எந்த பொறுப்புக்களும் வழங்காமல் இடமாற்ற நடவடிக்கை எடுத்ததாக அதன் போது அந்த பொலிஸ் பிரதானி எச்சரித்திருந்ததாக  சி.ஐ.டி.க்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் படியே குறித்த சூம் கலந்துரையாடல் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31