( எம்.எப்.எம்.பஸீர்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதலின் போது, போராட்டக் காரர் ஒருவரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படும் ஒருவரை சி.ஐ.டி.யினர் இன்று ( 21) கைது செய்துள்ளனர்.
பாதாள உலக உறுப்பினர் ஒருவரின் சகோதரர் என அறியப்படும் 'சதா நாலக' எனும் நபரையே இவ்வாறு சி.ஐ.டி.யினர் இன்று ஹோகந்தர பகுதியில் மறைந்திருந்த போது கைது செய்துள்ளனர்.
குறித்த நபர், 9 ஆம் திகதி கோட்டா கோ கம மீதான தாக்குதலின் போது அரசாங்க ஆதரவாளர்களுடன் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிள் ஒன்றில் காலி முகத்திடலுக்குள் புகுந்துள்ளதாக சி.ஐ.டி. விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னர் சந்தேக நபர், மிரிஹானையில் ஜனாதிபதி இல்லத்துக்கு அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, இராணுவ பஸ் வண் டியை செலுத்தி வந்து ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு குறுக்காக நிறுத்தியுள்ளமை தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்ப்ட்டுள்ளன.
அத்துடன் பாராளுமன்ற சுற்று வட்டம் அருகே மே 5 ஆம் திகதி நடந்த ஆர்ப்பாட்டத்தின் போதும், சந்தேக நபர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அங்கு சென்று கோஷங்களை எழுப்பியுள்ளமை தெரியவந்துள்ளது.
இந் நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் சி.ஐ.டி.யினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM