(நா.தனுஜா)
தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு அவசியமான வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்கும் பணிக்குப் பொறுப்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு அவசியமான உதவியை வழங்குவதற்கு மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் முன்வந்திருந்த நிலையில், அதற்கமைவாகவே இந்த நியமனம் இடம்பெற்றிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைப்பதற்கான தனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டமைக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நன்றி தெரிவித்திருக்கும் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட், இலங்கைக்கு உதவுவது குறித்து தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் இவ்விடயத்தில் தன்னால் இயன்றவரை சிறப்பாகச் செயற்படத்தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
அதேவேளை இந்நியமனம் தொடர்பில் மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹீம் மொஹமட் சோலி அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:
'இலங்கைக்கான சர்வதேச உதவிகளை ஒருங்கிணைப்பதற்குப் பொறுப்பாக முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளமையை நாங்கள் வரவேற்கின்றோம்.
தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து இலங்கை மீட்சியடைவதற்கு அவசியமான உதவிகளை இயலுமான அனைத்து வழிமுறைகளிலும் வழங்குவதற்கு மாலைதீவு தயாராக இருக்கின்றது' என்று அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மொஹமட் நஷீட்டின் இந்த நியமனம் தொடர்பில் மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷஹீட் பின்வருமாறு கருத்து வெளியிட்டுள்ளார்:
'மாலைதீவும் இலங்கையும் நீண்டகாலமாக நட்புறவைப்பேணிவரும் அயல்நாடுகளாகும். அவ்வாறானதொரு நாட்டிற்கு எப்போதும் இயலுமான வழிகளில் அவசியமான உதவிகளை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
எனவே இலங்கைக்கான சர்வதேச உதவிகளை ஒருங்கிணைப்பதற்குப் பொறுப்பாக முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளமையை வரவேற்கின்றோம்' என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM