(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொலிஸ் கராஜ்களில் எரிபொருள் 121 ரூபாவுக்கு வழங்குமாறு தெரிவித்து, சபாநாயகர் அறிவிப்பு செய்திருப்பதை எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக்க பத்திரண வெளிப்படுத்தியதால் சபைக்குள் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பாராளுமன்றம் வியாழக்கிழமை (19) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.
பிரதான நடவடிக்கைகளை தொடர்ந்து ஒழுங்கு பிரச்சினை ஒன்றை ஏப்ழுப்பி ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் புத்திக்க பத்திரண குறிப்பிடுகையில்,
நாட்டில் எரிபொருளுக்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது. மக்கள் வாகனங்களில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு பொலிஸ் கராஜ்களில் 121 ரூபாவுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் அறிவிப்பு செய்திருக்கின்றார்.
மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளும்போது நாங்கள் மாத்திரம் இவ்வாறு எரிபொருளை குறைந்த விலைக்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தால், மக்கள் எங்களுக்கு எதிராக குரல் எழுப்புவதை தடுக்க முடியாது.
அதனால் சபாநாயகர் தெரிவித்திருக்கும் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் தற்போது நடைமுறையில் இருக்கும் விலையைவிட ஒரு ரூபாகூட குறைந்த விலைக்கு எரிபொருள் தேவையில்லை.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு என விசேட இடத்தில் எரிபொருள் நிரப்பவேண்டிய தேவையும் இல்லை. அதனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட வரப்பிரசாதங்கள் எதுவும் வேண்டாம் என்றார்.
புத்திக்க பத்திரணவின் இந்த கருத்தால் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் பலரும் அவரை பார்த்து மிகவும் ஆத்திரமடைந்து பேசுவதை காணக்கூடியதாக இருந்தது.
இதன்போது ஹர்ஷ டி சில்வா, நளின் பண்டார ஆகியோர் புத்திக்க பத்திரணவின் அருகில் சென்று, இரகசியமான முறையில் ஏதோ தெரிவித்துக்கொண்டிருந்தனர்.
குறிப்பாக முஜிபுர் ரஹ்மான் புத்திக்க பத்திரணவை பார்த்து மிகவும் ஆத்திரமடைந்து அவருக்கு ஏதோ தெரிவித்துக்கொண்டிருந்தார். அதேபோன்று ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சிலரும் இந்த கருத்து எதிராக கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் புத்திக்க பத்திரண, ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து, தான் தெரிவித்த கருத்தை பிழையாக விளங்கிக்கொண்டுள்ளர்.
121 ரூபாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் எரிபொருள் நிரப்புவதாக நான் தெரிவிக்கவில்லை. மாறாக சபாநாயகர் இவ்வாறு அறிவிப்பு செய்திருப்பதாக சிங்கள ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருக்கின்றது.
இதனால் மக்கள் எங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள். அதனையே நான் இங்கு முன்வைத்தேன் என்றார்.
இதற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த வாரம் பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ள அவர்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என உங்களிடம் கேட்டுக்கொண்டிருந்தோம்.
அதன் பிரகாரம் நீங்கள் பொலிஸ் கராஜில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த வாரம் மாத்திரம் எரிபொருளை பெற்றுக்கொடுக்க பெற்றொலிய கூட்டுத்தாபனத்தின் அனுமதியை கோரி இருந்தீர்கள்.
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தார். பாரிய சேதங்கள் ஏற்பட்டிருந்தன. இவ்வாறான நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரிசையில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளும்போது அவர்களின் உயிரிக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு கூறுவது? அதனால்தான் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கையை இந்த வாரத்துக்கு மாத்திரம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருந்தோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM