( எம்.நியூட்டன் )
முள்ளி வாய்க்கால் மே 18 நினைவுதினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களிலும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
குறிப்பாக கத்தோலிக்க ஆலயங்கள் ,இந்து ஆலயங்கள் யாழ் பல்கலை கழகம், அரசியல் கட்சி அலுவலகங்களிலும் மற்றும் பிரதேச சபைகளிலும் இடம்பெற்றது.
ஆலயங்களில் காலை வேளையில் விசேட திருப்பலிகள் வழிபாடுகளும் இடம்பெற்றன.
வேலணை பிரதேச சபை முன்பாக நினைவு தூபி வலி கிழக்கு பிரதேசசபையில் தவிசாளர் உறுப்பினர்களாலும் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முன்பாக மாணவர்கள் மற்றும் ஊழியர்களால் நினைவுகூரப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, முள்ளிவாய்க்காலில் உறவுகளை இழந்த மாணவனால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களால் சுடரேற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
மாலை வேளை அரசியல் கட்சி அலுவலங் களிலும் அஞ்சஙி நினைவு கூரப பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM