யாழில் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுதினம்

Published By: Digital Desk 5

18 May, 2022 | 09:11 PM
image

( எம்.நியூட்டன் )

முள்ளி வாய்க்கால் மே 18 நினைவுதினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களிலும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

குறிப்பாக கத்தோலிக்க ஆலயங்கள் ,இந்து ஆலயங்கள் யாழ் பல்கலை கழகம், அரசியல் கட்சி அலுவலகங்களிலும்  மற்றும் பிரதேச சபைகளிலும் இடம்பெற்றது.

ஆலயங்களில் காலை வேளையில் விசேட திருப்பலிகள் வழிபாடுகளும் இடம்பெற்றன.

வேலணை பிரதேச சபை முன்பாக நினைவு தூபி வலி கிழக்கு பிரதேசசபையில் தவிசாளர் உறுப்பினர்களாலும் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  அனுஷ்டிக்கப்பட்டது.

மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முன்பாக மாணவர்கள் மற்றும் ஊழியர்களால் நினைவுகூரப்பட்டது.

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, முள்ளிவாய்க்காலில் உறவுகளை இழந்த மாணவனால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களால் சுடரேற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மாலை வேளை அரசியல் கட்சி அலுவலங் களிலும் அஞ்சஙி நினைவு கூரப பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57