பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரது வீடு தாக்கி, பலத்த சேதம் விளைவிக்கப்பட்டமை குறித்து, விசாரணைகளை மேற்கொண்ட பண்டாரவளைப் பொலிஸார் ஐந்து பேரை, இன்று கைது செய்துள்ள நிலையில் மேலும் பலர் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான திஸ்ஸகுட்டியாராய்ச்சியின் வாசஸ்தலமே, இவ்வாறு தாக்கி சேதப்படுத்தப்பட்டது.
கடந்த 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து பண்டாரவளை மாநகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியின் பின்னர், அங்கு கூடிய கும்பல், மேற்படி பாராளுமன்ற உறுப்பினரின் வாசஸ்தலப் பகுதிக்கு ஊர்வலமாக சென்று, அவ் வாசஸ்தலத்தை தாக்கி, பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருந்தனர்.
இச் சம்பவம் குறித்து, விசாரணைகளை மேற்கொண்ட பண்டாரவளைப் பொலிசார், இன்று ஆரம்பக்கட்டமாக ஐவரைக் கைது செய்து, சாரணைக்குற்படுத்தியுள்ளனர். மேலும் சிலர் தேடப்பட்டும் வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் விசாரணைகள் நிறைவுற்றப் பின்னர், அவர்கள், பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM