இம்ரான் கான் கைது செய்யப்பட்டால் “பாகிஸ்தான் இலங்கையாக மாறும்” என அந்நாட்டு முன்னாள் அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஷீத் அஹமட் ஞாயிற்றுக்கிழமை பைசலாபாத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதுதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாகிஸ்தானில் பிரதமராக இருந்த இம்ரான் கான், நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் கடந்த மாதம் வெளியேற்றப்பட்டார். அதன்பின்னர் தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்டி வரும் இம்ரான் கான், தனது அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா சதி செய்ததாக குற்றம் சாட்டி வருகிறார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை அமெரிக்காவும் தற்போதைய பாகிஸ்தான் அரசாங்கமும் மறுத்துள்ளன. இம்ரான் கான் உள்நாட்டுப் போரைத் தூண்டுவதற்கு திட்டமிட்டிருப்பதாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டியிருந்தார்.
பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமட்
இந்நிலையில், “இம்ரான் கான் கைது செய்யப்பட்டால், பாகிஸ்தான் இலங்கையாக மாறும்” என பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அரசுக்கு பாகிஸ்தான் முன்னாள் மந்திரி ஷேக் ரஷீத் அகமது எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று பேசிய பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமட், “இம்ரான் கான் ஒருவேளை கைது செய்யப்பட்டால் பாகிஸ்தான் இலங்கையாக மாறும். அதற்கு தற்போதைய அரசுதான் பொறுப்பு.
ஆனால், இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமை பாகிஸ்தானில் மாறுவதை நான் விரும்பவில்லை. நாடும் இயல்புநிலையை நெருங்கிவருகிறது" எனக் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM