(அட்டன் கிளை)
சமையால் எரிவாயு இல்லாத காரணத்தால் அட்டன் நகரின் பிரதான உணவங்கள் கடந்த 10 நாட்ளுக்கும் மேலாக மூடப்பட்ட நிலையிலுள்ளன.
இதன் காரணமாக அட்டன் நகருக்கு அன்றாடம் வருகை தரும் மக்கள் உணவை பெற்றுக் கொள்ள முடியாது அலைந்து திரிவதை காணக்கூடியதாக உள்ளது. ஓரிரு சிறு உணவகங்களும் சிற்றுண்டிகளை மாத்திரமே விற்பனை செய்கின்றன.
அரிசிச் சோறு உணவுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. ஒரு சிலர் பேக்கரி உணவுகளை பகல் உணவாக உண்ணும் நிலை தோன்றியுள்ளது.
ஒரு சில உணவகங்கள் கடந்த 5 ஆம் திகதி முதல் மூடப்பட்டிருந்ததால் பொசன் போயா தினம் வரை அட்டனுக்கு வருகை தந்திருந்த சிவனொளிபாதமலை யாத்ரிகர்களும் கடும் சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.
ஒரு சில உணவகங்களில் மண்ணெண்ணெய் மற்றும் விறகு அடுப்புகளின் மூலம் சிறிய அளவிலான உணவுகள் தயாரிக்கப்பட்டாலும் அவை சாத்தியப்படவில்லையென உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால் அதில் பணி புரியும் பலர் தமது வேலை வாய்ப்பையும் இழந்துள்ளமை முக்கிய விடயம்.
கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக அட்டன் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு சமையால் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM