இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி விட்டிங் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோருக்கிடையில் இன்று காலை 9.30 மணியளவில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர், கல்வியமைச்சர் எஸ் தண்டாயுதபானி மற்றும் விவசாயத்துறை அமைச்சர் கே.துரைராஜசிங்கம் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.
இதன்போது யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் ஒன்றான கிழக்கு மாகாணத்தில் வசிப்பவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, மீள்குடியேற்ற செயற்பாடுகள் மற்றும் அரசியல் யாப்பில் அதிகார பங்கீடு தொடர்பான கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அங்கவீனமானவர்கள், விதவைகள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவது தொடர்பில் இங்கு கனேடிய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கிழக்கின் சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கு கனடா உதவிகளை வழங்கி வரும் நிலையில் அதனை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டுள்ளன.
பல்லின கலாசாரத்தைக் கொண்ட நாடான கனடாவில் அரசியல் யாப்பு ரீதியாக அனைவருக்கும் சமமான அங்கீகாரமும் அதிகாரப் பங்கீடும் வழங்கப்பட்டுள்ளது.
எனவே இலங்கையில் தற்போது அரசியல் யாப்புத் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் அதிகாரப் பங்கீடு தொடர்பில் கனடாவின் அனுபவங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் உள்ள 3 மாவட்டங்களிலும் ஆங்கில மொழிக் கற்கை நிலையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிலையங்களை உருவாக்குவது தொடர்பிலும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளன.
-அப்துல் கையூம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM