(எம்.மனோசித்ரா)
சாதாரண மற்றும் ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு விநியோகிக்கும் பணிகள் (17) செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், சேவைகளைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்போர் முன்னரே தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று குடிவரவு - குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே இரு சேவைகளின் அடிப்படையிலும் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பவர்கள் 070-7101060 என்ற இலக்கத்திற்கு அழைத்து அல்லது www.immigration.gov.lk என்ற இணையதளத்திற்குள் பிரவேசித்து தமக்கான நேரத்தையும் திகதியையும் ஒதுக்கிக் கொள்ளுமாறு குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
திணைக்களத்தின் கடவுச்சீட்டு விநியோக இயலளவு நாளொன்றுக்கு 2000 என்பதால் , முன்கூட்டியே திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொள்வதன் மூலம் அசௌகரியத்தை தவிர்த்துக் கொள்ள முடியும் என்றும் குடிவரவு - குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படும் மற்றும் கடவுச்சீட்டுக்களின் கையிருப்பு முடிவடையும் என்பது தொடர்பில் பரவும் வதந்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும் என்றும் குடிவரவு - குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM