(ஏ.என்.ஐ)
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்புக் கலந்துரையாடல் இந்தியாவில் திங்கட்கிழமை(16) ஆரம்பமாகியது.
பாகிஸ்தானில் இருந்து 3 பேர் கொண்ட பிரதிநிதிகள் அடங்கிய குழு கலந்துகொண்டுள்ளதுடன் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளின் பிரநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
பாகிஸ்தானின் தூதுக்குழுவாக எல்லை வழியாக டெல்லியை வந்தடைந்தது. பாகிஸ்தான் தூதுக்குழு மே 20 வரை இந்தியாவில் தங்கியிருக்கும் என்று ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் துணை வெளியுறவு அமைச்சர்கள் கடந்த மாதம் மொஸ்கோவில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.
இதன்போது ஆப்கானிஸ்தான் விவகாரம் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்த நாடு ஒரு மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த முக்கிய சந்திப்புகள் நடைபெறுகின்றன.
தலிபான்கள் அதிகாரத்திற்கு வந்த பின்னர் பொருளாதார சீர்குலைவு மற்றும் உணவு பற்றாக்குறை ஆகியவை நாட்டை மனிதாபிமான நெருக்கடியின் விளிம்பிற்கு தள்ளியது.
முன்னதாக நவம்பர் மாதம், ஆப்கானிஸ்தான் தொடர்பான மூன்றாவது பிராந்திய பாதுகாப்பு கலந்துரையாடல் விரிவாக்கப்பட்ட வடிவத்தில் டெல்லியில் நடைபெற்றது.
இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் , செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஆப்கானிஸ்தானின் அரசியல் நிலைமை மற்றும் பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மனிதாபிமான உதவியின் தேவை ஆகியவற்றிலிருந்து எழும் அச்சுறுத்தல்கள் குறித்தும் கவனத்தில் செலுத்தப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM