(நா.தனுஜா)
அனைத்துக்கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைப்பதில் காணப்படும் முட்டுக்கட்டைகளின் காரணமாக, தன்னால் முக்கிய பங்களிப்பை வழங்கக்கூடிய பாராளுமன்றப் பொதுநிதிக்குழுவிற்குத் தலைமைதாங்கத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ - பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சுப்பதவிகளையும் பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்த ஹர்ஷ டி சில்வா, பொதுநிதிக்குழுவிற்குத் தலைமைதாங்குவது தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:
நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கு அனைத்துக்கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைப்பதில் காணப்படுகின்ற முட்டுக்கட்டை காரணமாக பாராளுமன்ற பொதுநிதிக்குழுவிற்குத் தலைமைதாங்க முன்வருகின்றேன்.
பாராளுமன்ற முன்மொழிவாக அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய பொருளாதார மறுமலர்ச்சித்திட்டத்தைத் தயாரிப்பதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கும் தயாராக இருக்கின்றேன்.
பொதுநிதிக்குழு தொடர்பில் அறியாதவர்களுக்கு அதுகுறித்து விளக்கமளிக்க விரும்புகின்றேன். அரசியலமைப்பிற்கான 148 ஆவது உறுப்புரையின் பிரகாரம் பொதுநிதியை முழுமையாகக் கட்டுப்படுத்தக்கூடிய விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்ட மிகவும் வலுவானதொரு குழுவாகப் பாராளுமன்ற பொதுநிதிக்குழு காணப்படுகின்றது.
எனவே அரசாங்கத்தில் அங்கம்வகிப்பதை விடவும், பொதுநிதிக்குழுவில் என்னால் முக்கிய பங்களிப்பைச்செய்யமுடியும் என்று கருதுகின்றேன் என்று அப்பதிவில் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM