( எம்.எப்.எம்.பஸீர்)
மக்களின் அரசியலமைப்பினால் உறுதி செய்யப்பட்ட உரிமைகளை மீறும் வகையில், கோட்டா கோ கம, மைனா கோகம அமைதி போராட்டத்தில் அத்து மீறிதாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விசாரணைகளில் இதுவரை சி.ஐ.டி.யினர் சுமார் 170 வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ள நிலையிலேயே தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அலரி மாளிகைக்கு அருகே அமைக்கப்பட்ட மைனா கோ கம மீது அத்துமீறி அங்கு அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைத் தாக்கியமை, சொத்து சேதம் விளைவித்தமை மற்றும் சட்ட விரோத கூட்டம் ஒன்றின் உறுப்பினராக இருந்தமை தொடர்பில் குறித்த நபர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவை நகர சபை ஊழியரான 49 வயதுடைய குறித்த சந்தேக நபரை, இன்று ( 15) அதிகாலை கைது செய்ததாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மைனா கோ கம, கோட்டா கோ கம மீதான தாக்குதல்கள் குறித்து சி.ஐ.டி.யினர் சிறப்பு விசாரணைகளை சட்ட மா அதிபரின் நேரடி மேற்பார்வையில் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சி.ஐ.டி.யினர் பதிவு செய்துள்ள வாக்கு மூலங்கள் மற்றும் வீடியோ, புகைப்பட சான்றுகள், தொழில் நுட்ப சாட்சிகளுக்கு அமைய குறித்த சந்க்தேக நபர், அமைதி ஆர்ப்பாட்டக் காரர்கள் மீதான தாக்குதலில் நேரடியாக தொடர்புபட்டுள்ளமை தெரியவந்த நிலையில், அவரைக் கைது செய்ததாக சி.ஐ.டி.யினர் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM