(எம்.மனோசித்ரா)
பிரதி சபாநாயகர் பதவிக்கு மீண்டும் இம்தியாஸ் பாகீர் மாக்கரை பரிந்துரைக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இடம்பெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இம்தியாஸ் பாகீர் மாக்காருடைய பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
இம்தியாஸ் பாகீர் மாக்கார் நியமிக்கப்பட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் அவருக்கு ஆதரவாக வாக்களிப்பதாகவும் , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தம் சார்பில் எவரையும் நியமிக்க எதிர்பார்க்கவில்லை என்றும் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானத்தை அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்கவிடம் வினவிய போது , அவ்வாறு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கேசரிக்கு தெரிவித்தார்.
அதே போன்று மக்கள் வி டுதலை முன்னணியும் இவ்விடயத்தில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று அதன் உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இந்நிலையில் பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதி சபாநாயகர் பதவிக்கு வேட்பாளராக நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற குழுவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM