ஐக்கிய அரபு இராச்சியத்தின் புதிய ஜனாதிபதியாக ஷேக் முகமது பின் சயீத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியாக இருந்தவ ஷேக் கலீஃபா பின் சையத் அலி நகியான் (74) உடல் நலக் குறைவால் நேற்று காலமானார்.
2004 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைவராக இருந்து வந்தார். இதனால் அங்கு 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மறைவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். எமது அயல் நாடான இந்தியாவில் இன்று துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மறைவை அடுத்து, புதிய ஜனாதிபதியாக ஷேக் மொஹமட் பின் சையத் தெரிவாகி உள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் புதிய ஜனாதிபதி ஷேக் மொஹமட் பின் சையத்
ஷேக் கலீஃபா கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியாகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த சூழலில் நேற்று (13) அவர் காலமானதை தொடர்ந்து அவரது சகோதரர் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு உள்ளார். இதன் மூலம் நாட்டின் மூன்றாவது ஜனாதிபதி என்ற பெருமையை ஷேக் மொஹமட் பின் சையத் பெற்றுள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என தெரிகிறது. இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆயுதப்படைகளின் துணை தளபதியாகவும் பணியாற்றி உள்ளார். ஆயுதப்படைகள் திட்டமிடல், பயிற்சி, பாதுகாப்பு திறன் ஆகியவற்றை மேம்படுத்தியதில் இவருக்கு முக்கியப் பங்கு உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM