(நா.தனுஜா)
இலங்கையர்களுக்கான விசா வழங்கலை இந்தியா இடைநிறுத்தியிருப்பதாக வெளியான செய்திகளை மறுத்திருக்கும் இலங்கையிலுள்ள இந்தியத்தூதரகம், அச்சேவைகள் சீராக இயங்குவதில் சில சிக்கல்கள் காணப்பட்டதாகத் தெளிவுபடுத்திருக்கின்றது.
இலங்கையர்களுக்கான விசா வழங்கலை இந்தியா இடைநிறுத்தியிருப்பதாக செய்திகள் வெளியானதையடுத்து, இதுகுறித்து வழங்கியுள்ள தெளிவுபடுத்தலிலேயே இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் உயர்ஸ்தானிகராலயம் மேலும் கூறியிருப்பதாவது,
நாமோ (இந்திய உயர்ஸ்தானிகராலயம்) அல்லது இந்திய கொன்சியூலர் நாயகமோ அல்லது இலங்கையிலுள்ள இந்தியத்துணைத்தூதரகங்களோ விசா வழங்கலை நிறுத்தியிருப்பதாக வெளியாகும் செய்திகளை முழுமையாக மறுக்கின்றோம்.
பெரும்பாலானவர்கள் இலங்கையர்களாக இருக்கக்கூடிய விசா பிரிவு ஊழியர்கள் கடந்த சில தினங்களாக அலுவலகத்திற்கு வருகைதரமுடியாமல்போனதன் காரணமாக, அதற்குரிய நடைமுறைகள் சீராக இயங்குவதில் சிக்கல்கள் காணப்பட்டன.
இலங்கையர்கள் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்வதை எளிதாக்குவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்.
இந்தியர்கள் இலங்கையில் இருப்பதைப்போன்று இலங்கையர்களும் இந்தியாவிற்கு வரவேற்கப்படுகின்றனர் என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM